http://sivathamiloan.blogspot.com/2009/11/blog-post.html
சிவத்தமிழோன் என்ற நண்பர் தன் வலைப்பதிவில் திருவள்ளுவர் திருவுள்ளம் சைவம் என்று மிக நன்றாகவே எழுதியிருந்தார். படித்தவுடன் ஒவ்வொருக் கருத்துக்கும் என்னுடைய பின்னூட்டை எழுதலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால்,சில பின்னூட்டுக்கள் மற்றும் கொடுத்து அவரின் பதில் எவ்வாறு அமைகிறது என்று பார்க்க நினைத்தேன். பதில்கள் யான் எதிர்ப்பாத்த மாதிரிதான் இருந்தன. அவரிடம் பின்னூட்டு தொடர்வதில் பயன்னில்லை, ஆதலின், என் கருத்தை ஈண்டு பொதுவாக முன் வைக்கிறேன்!
தமிழ்க் குழுமங்களில் நிறைய முறை திருக்குறள் பற்றி அலசியாயிற்று! திருக்குறள் பற்றிய வழி வழி வரும் சில கர்ண கதைகளை முழுமையாக நம்புகிறார்கள். நம்புவதோடு மட்டும் இல்லாமல் அதையே தங்களுக்கு ஆதரவாக குறிக்கவும் செய்கிறார்கள். இதில் சில விதிவிலக்கான அறிஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்றைய இணைய தமிழறிஞர்கள் கவனிக்க தவறும் சில கருத்துக்களை சிலவற்றை கீழே கொடுத்திருக்கிறேன்.
திருக்குறள் சமயம் பற்றி ஆராயும் வலைஞர்கள் கவனிக்க வேண்டியவை
1. திருக்குறள் சமயம் அதன் கடவுள் வாழ்த்தில் தான் ஆராய வேண்டும். திருக்குறளில் இந்திரனைப் பற்றி, தாமரைக் கண்ணான் பற்றி, அந்தணர் பற்றி, காமத்துப் பாலை பற்றி சொல்லியிருக்கிறது போன்ற வாதங்கள் ஆராய்ச்சிக்கு எடுபடாது.
2. திருக்குறள் கடவுள் வாழ்த்தில் வரும் குறிச்சொற்களான “ஆதிபகவன்”, ”வாலறிவன்”,
“அறவாழி அந்தணன்”, ”ஐந்தவித்தான்”, ”மலர்மிசை ஏகினான்”, “எண்குணத்தான்”, “வேண்டுதல் வேண்டாமையிலான்” போன்ற சொற்றொடர்களுக்கு இலக்கணம் காண முயன்றாலே குறளின் ஆசிரியர் சமயத்தை எளிதில் உள்ளலாம்.
3. கடவுள் வாழ்த்தில் வரும் குறிச் சொற்களைப் பற்றி நிகண்டுகள் என்ன சொல்கின்றன என்று பார்க்கலாம்.
4. திருக்குறள் நீதி நூல். அது ஒரு வாழ்வியல் நூலும் கூட. அதில் பலதரப் பட்ட செய்திகள் சொல்லப்பட்டிருக்கும். காட்டாக, ஒரு நாட்டின் மன்னன் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என்று கூறும் குறளில் (குறள்: 550)மரண தண்டனையைப் பற்றி கூறியிருக்கிறது அதனால், அது சமண நூலாகாது என்று துணிகிறார்கள். இக்குறளில் சமயத்தை ஏன் தேடுகிறார்கள்?
5. தமிழில் தோன்றிய நூற்களில் மிக சிறப்புடைத்து திருக்குறள். அக்குறளை ஏன் சைவத் திருமுறைகளில் ஒன்றாக வைக்கவில்லை என்ற தமிழ்த் தென்றல் திரு.வி.காவின் கேள்விக்கு இதுவரை யாரும் விடைக் கண்டதாகத் தெரியவில்லை. அவரின் கட்டுரையிது.
http://www.treasurehouseofagathiyar.net/37300/37332.htm
http://www.treasurehouseofagathiyar.net/37300/37357.htm
6. சமகால இலக்கியங்கள் குறளின் சமயத்தை ஆராய துணைபுரியும்.
சிவத்தமிழோன் அவரின் கட்டுரைக்கு என் மறுப்புரை
1. அவர்: //பகவன் எனும் சொல் சமணத்துடன் தொடர்பானதாயின் அது சமண நூல் ஆகிவிடுமா என்ன? இன்று வேதம்,வேதாகமம்,வீபூதித் திருநாள் என்பன கிருஷ்தவத்துள் புழக்கத்தில் இருப்பது கண்கூடு!//
என் பதில்: வேதம், வேதாகமம், வீபூதித் திருநாள் போன்ற சொல்லாடல்கள் இன்றைய கிருத்துவர்கள் உபயோகித்தாலும் அவை கிருத்துவ பதங்கள் இல்லை என்ற தங்கள் கருத்தை யான் ஆமோதிக்கிறேன். கிருத்துவ பைபிள் தமிழாக்கம் செய்தவர்கள் சைவத் பெருந்தகையர்கள் என்பதை தாங்கல் அறிவீர்கள் என்று நினைக்கிறேன்.
http://www.treasurehouseofagathiyar.net/27700/27752.htm
இன்று இச்சொற்களை கிருத்துவம் உபயோகித்தாலும் அவைகள் முதன்
முதலிலேயே சைவத் தமிழ் இலக்கியங்களில் விரவி வருவதைக் கொண்டு அவை கிருத்துவ சொற்றொடர்கள் அல்ல என்பதை எளிதில் உள்ளலாம். :-)
அவ்வாறே “ஆதிபகவன்” என்ற சொல்லாட்சி முதன் முதல் சமணத் தமிழ் இலக்கியங்களில் விரவி வந்து பின்னாளில் மற்ற சமயங்கள் எடுத்தாண்டன எனறு யான் சொன்னால் தாங்களும் ஆமோதிப்பீர்கள் என்று கருதுகிறேன். ;-)
2. அவர்: //சமண சமய அறிமுகத்தால் தமிழில் அச்சொல் புழக்கத்தில் இருந்தமையால் வள்ளுவர் பயன்படுத்தியிருக்க வாய்ப்புண்டல்லவா? ஏனெனில் சமணநூலே திருக்குறள் என்பதற்கு எந்தவித சிந்தனையும் இன்றி இதையே சுட்டுகின்றனர்.//
என் பதில்: அதைத்தான் யானும் கேட்கிறேன். குறளின் கடவுள் அதிகாரத்தில் உள்ள சொற்றொடர்களை ஏன் சைவம் பொன்னேப் போல் எடுத்தாளவில்லை? மாறாக, அவைகள் சமண இலக்கியங்களில் விரவி வருகின்றனவே! ஏன் வரவில்லை என்றால், அவைகள் சமணத் சொற்றொடர்கள்! ஆகையால், சைவ இலக்கியங்களில் விரவி வரவில்லை. என்னை?
3. அவர்: //திருக்குறளுக்கு சமண நூல் எனும் மாயை சூட்டியவர்கள் மறுபிறப்புக் கொள்கையை மறந்துபோனது ஏனென்று விளங்கவே இல்லை.//
யான்: தாங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்று புரியவில்லை. சமணத்தில் “மறுபிறப்பு” இல்லை என்று சொல்ல வருகிறீர்களா? மறுபிறப்பில்லை என்றால் ஊழ் இல்லை, சமணக் கோட்பாடே தோன்றியிருக்காது! :-)
4. அவர்: //எண் குணத்தான் என கடவுளை திருக்குறள் கூறுகின்றது.//
யான்: ஆம் கூறுகிறது! தமிழில் தோன்றிய நிகண்டுகளைப் பார்க்கவும். “எண்குணத்தான்” அருகக் கடவுளுக்கே உரியவை என்று அவைகள் பகரும். சிவபிரானுக்கு எண்குணத்தான் என்று யாண்டும் சொல்லப்படவில்லை.
5. அவர்: //சமண, பௌத்தப் புலவர்கள் திருவள்ளுவரையோ அன்றி
திருக்குறளையோ போற்றிப் புகழ்ந்ததாக இட்டுக்கட்டிக்கூட காட்டமுடியாது.//
யான்: :-) என்ன ஒரு மறுக்க முடியாத ஆதாரம். தங்களுக்கு சமணத் தமிழ் இலக்கியங்களில் பயிற்சி இல்லை என்பதைத் தான் தங்களின் கூற்று தெரிவிக்கிறது. சொல்ல போனால் நான் கேட்டிருக்கவேண்டிய கேள்வியிது. ;-) சமணர்கள் குறளைத் தங்கள் வேதமாகக் கூறியிருக்கிறார்கள். ”எம் ஒத்து”, என்றும் ”தேவர் உரைப்ப தெளிந்தேன்” (காலத்தால் முந்திய ஆதாரம்) என்றும் கூறியிருக்கிறார்கள். மற்ற சமயத்தவர் அவ்வாறு கூறியதாக யான் படித்ததில்லை. அவ்வாறு வரும்மின், சுட்டவும். திருத்திக் கொள்கிறேன் ஐயா!
6. அவர்: //பொதுநூலாக எழுத வெளிக்கிட்டபிறகு சிவன் எனும் பெயரை தவிர்த்திருப்பார் வள்ளுவர்.//
யான்: ஆமாம். தாங்கள் சொல்வது சரிதான். ”சிவ” என்ற சொல்லாட்சி முதன் முதல் பயின்று வரும் இலக்கியம் “சிலப்பதிகாரம்”. அந்த சொல்லாட்சியும் ‘அருகப்பதவியைச் சுட்ட” “சிவகதி நாயகன்” என்று இளங்கோவடிகள் கூறியிருக்கிறார். ”பிறவாயாக்கை பெரியோன்” என்று
தான் சிவனும் போற்றப்படுகிறாரே தவிர “சிவனுக்கு” சிவன் என்று பயின்று வரவில்லை. :-)
7. அவர்: //எனவே உள்ளீடு இல்லாத சமயங்களின் உரைகளை அச்சமயங்களின் நூல்களை படித்து கேட்டு காலத்தை வீணாக்குவது தவறு என்கின்ற சைவ சித்தாந்த மரபில் திருக்குறளை எடுத்துக்காட்டுகளாக நேரடியாக பயன்படுத்தியிருப்பதில் இருந்து திருக்குறள் சமணநூல் அல்ல என்பதும் சைவநூலே என்பதும் தெளிவாகிறது.//
யான்: 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ பெரிந்தகையான சிவாமிநாத தேசிகர் எழுதிய “இலக்கணக் கொத்து” என்ற நூலைப் படித்திருக்கிறீர்களா?
http://www.treasurehouseofagathiyar.net/27900/27989.htm
8. அவர்: //சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் கூட சைவநெறியைச் சார்ந்தவரே என்ற கருத்து வலிமைபெற்றுள்ளது. சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்ற சமயசார்பற்ற தன்மை கொண்டு இதை உறுதிசெய்வர்.//
யான்: அப்படியா? சிலப்பதிகாரம் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இளங்கோவடிகள் சைவப் புலவர் எனின், அருகருக்கு ஏன் குறளின் கடவுள் வாழ்த்தில் வரும் குறிச்சொற்களைப் வைத்துப் போற்றிப் புகழ்ந்துப் பாடியிருக்கிறார்? :-)
9. அவர்: //திருக்குறள் ஏனைய சமயங்களுக்கு ஒவ்வாத கருத்துகளைக் கொண்டது என்பதையும் சைவ சித்தாந்த நூலே என்பதையும் திருக்குறளை ஆராய்வுசெய்து வாலையானந்த அடிகள் 1926- 27களில் வெளிவந்த செந்தமிழ்ச் செல்வி பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தொகுத்து நூலாக வெளியிட்டிருந்த திருவள்ளுவர் சித்தாந்த சைவர் என்னும் நூல் மெய்கண்டதேவரின் குருபூசையன்று மறுபதிப்பாக வெளியிடப்பட்டிருந்தது.//
யான்: திருக்குறள் சமண நூலே! சமண தமிழ் நூட்களை பின்னாளில் மாற்ற முயன்ற வரலாறு தமிழ் அறிஞர்கள் நன்கறிவார்கள்.
வாழிய நல்லறம்! வளர்க திருவறம்!!
இரா.பானுகுமார், (இரா.பா)
சென்னை.
Sunday, November 15, 2009
திருக்குறள் சில கருத்துக்கள்
Sunday, October 11, 2009
பகுத்துண்டு பல்லூயிர் ஓம்புதல்
பகுத்துண்டு பல்லூயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை - திருக்குறள் (322)
இக்குறள் குறித்து மின்தமிழ் குழுமத்தில் அலசப்படுகிறது. சுட்டியைப்
பார்க்கவும்.
http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/d719a8cfe875af3c/fd09d3b0a544fb9c#fd09d3b0a544fb9c
இக்குறளில் “நூலோர்” என்பது யாரைக் குறிக்கிறது என்பது தான்
இங்கே விவாதப் பொருள்.
எந்த குறளின் கருத்தையும் அறியும் முன் அக்குறள் எந்த அதிகாரத்தில்
கூறப்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இக்குறள்
கொல்லாமை என்னும் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பதைக்
கருத்தில் கொள்க. இது நிற்க.
"பரஸ்பரப்கிரகோ ஜீவானாம்" - என்பது ஆச்சாரியார் உமாசுவாமி அருளிய
"தத்வார்த்த சூத்திரம்”. இப்பாட்டின் பொருள்: பகிர்ந்து உண்டு, எல்லா
உயிர்களையும் காத்தலே உயிரின் நோக்கம். இதன் எதிரொலியே குறளின்
“பகுத்துண்டு பல்லூயிர் ஓம்புதல்” என்பது.
இன்னுமொரு எ.கா:
”பாங்கமை செல்வராகிப் பகுத்துண்டு வாழ்தல் ஒன்றே
தாங்கிய தவத்தின் மிக்க தவநிலை நிற்றல் ஒன்றே” - நரிவிருத்தம்
நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை
மகாவீரர் காலத்திற்கு பிறகு, ஜைன ஆகமங்கள் தொகுக்கப்பட்டன.
இருசாரார்க்கும் (இல்லறத்தார், துறவறத்தார்), பொதுவாக “கொல்லாமையே”
தலையாய அறமாகக் கொள்ளப்பட்டது. “ஒன்றாக நல்லது கொல்லாமை”
என்ற குறள் இங்கு கருதத்தக்கது.
இக்குறளுக்கு பரிமேலழகர், “அறநூலை உடையார் துறந்தார்க்குத்
தொகுத்த அறங்கள் எல்லாவற்றினும் தலையாய அறம்” என்று உரை
செய்திருக்கிறார். இது பொருந்தாதாம்! இங்கு துறவறத்தார்க்கு சொல்லப்பட்டதாக
பொருள் படும்படி, வலிந்து பொருள் கூறுகிறார். இஃது சமணக் கொள்கையை
மறைக்கவெனில் வேறில்லை!
இரா.பானுகுமார்,
சென்னை
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை - திருக்குறள் (322)
இக்குறள் குறித்து மின்தமிழ் குழுமத்தில் அலசப்படுகிறது. சுட்டியைப்
பார்க்கவும்.
http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/d719a8cfe875af3c/fd09d3b0a544fb9c#fd09d3b0a544fb9c
இக்குறளில் “நூலோர்” என்பது யாரைக் குறிக்கிறது என்பது தான்
இங்கே விவாதப் பொருள்.
எந்த குறளின் கருத்தையும் அறியும் முன் அக்குறள் எந்த அதிகாரத்தில்
கூறப்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இக்குறள்
கொல்லாமை என்னும் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பதைக்
கருத்தில் கொள்க. இது நிற்க.
"பரஸ்பரப்கிரகோ ஜீவானாம்" - என்பது ஆச்சாரியார் உமாசுவாமி அருளிய
"தத்வார்த்த சூத்திரம்”. இப்பாட்டின் பொருள்: பகிர்ந்து உண்டு, எல்லா
உயிர்களையும் காத்தலே உயிரின் நோக்கம். இதன் எதிரொலியே குறளின்
“பகுத்துண்டு பல்லூயிர் ஓம்புதல்” என்பது.
இன்னுமொரு எ.கா:
”பாங்கமை செல்வராகிப் பகுத்துண்டு வாழ்தல் ஒன்றே
தாங்கிய தவத்தின் மிக்க தவநிலை நிற்றல் ஒன்றே” - நரிவிருத்தம்
நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை
மகாவீரர் காலத்திற்கு பிறகு, ஜைன ஆகமங்கள் தொகுக்கப்பட்டன.
இருசாரார்க்கும் (இல்லறத்தார், துறவறத்தார்), பொதுவாக “கொல்லாமையே”
தலையாய அறமாகக் கொள்ளப்பட்டது. “ஒன்றாக நல்லது கொல்லாமை”
என்ற குறள் இங்கு கருதத்தக்கது.
இக்குறளுக்கு பரிமேலழகர், “அறநூலை உடையார் துறந்தார்க்குத்
தொகுத்த அறங்கள் எல்லாவற்றினும் தலையாய அறம்” என்று உரை
செய்திருக்கிறார். இது பொருந்தாதாம்! இங்கு துறவறத்தார்க்கு சொல்லப்பட்டதாக
பொருள் படும்படி, வலிந்து பொருள் கூறுகிறார். இஃது சமணக் கொள்கையை
மறைக்கவெனில் வேறில்லை!
இரா.பானுகுமார்,
சென்னை
Monday, September 28, 2009
ஜினவாணி -1
ஜினவாணி (சரஸ்வதி)
உபாத்தியாயர் மற்றும் ஜினசுருதி
கல்விக்கு ஏற்றம் கொடுத்து இவ்வுலகில் மனிதம் நிலைப் பெற முயன்ற சமயங்களில் சமணம் முதன்மையானது என்றால் அது மிகையாகாது! சமணத்தில் கற்றல், கற்பித்தல் ஆகிய செயல்கள் புண்ணியச் செயல்களாக (நற்கட்டு) கருதப்படுகிறது. சமணகர்கள் தினம் வணங்கவேண்டிய
அரகந்தர், சித்தர், ஆச்சாரியர், உபாத்தியாயர், சர்வ சாதுக்கள், ஜின தர்மம், ஜின சுருதம், ஜின சைத்தியம், ஜின சைத்தியாலயம் என்னும் ஒன்பது தேவதைகளுள் உபாத்தியாயர் - கற்பிப்பவர் (வாத்தியார் என்று பின்னாளில் மருவியது) மற்றும் “ஜினசுருதம்” (ஆகமங்களைக் கற்றல்) என்னும் ஜினாகமங்களும் குறிக்கப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது. ஜினசுருதம், ஜினசுருதி என்ற பெயர்கள் ஜைன ஆகமங்களைக் குறிக்கும்.
ஜினசுருதம்
தீர்த்தங்கரர்கள் வாலறிவு (கேவல ஞானம்) என்னும் முழுதுணர் ஞானத்தை அடைந்தவுடன், தான் பெற்ற வரம்பற்ற அறிவையையும், உயிர்கள்
உய்ய அடைய வேண்டிய அறத்தையும் உரைக்க தேவேந்திரனால் ஏற்படுத்தப்படும் “சமவசரணம்” என்னும் அறஉபதேச மண்டபத்தில் தியான ரூபியாக எழுந்தருளுவார்கள். அப்போது அவரிகளிடமிருந்து திவ்யமயமான ஒலி பிறக்கும். இதுவே “திவ்யதொனி” எனப்படும். தீர்த்தங்கரர்கள் உதடுகள் அசையாமலே இந்த த்வனி பிறக்கின்றன. அவ்வாறு வெளிவரும் ஓசையானது கம்பிரமாகவும்,மனத்திற்கு இனிமையாகவும்,குற்றமற்றதாகவும்,பூவுலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் கேட்கும்படியாகவும் இருக்கும். இது தீர்த்தங்கரர்களுக்கு ஏற்படும் எண்வகை அதிசயங்களில் ஒன்று! கணதரர்கள் இவற்றின் பயன்களை பின்னர் வரும் சந்ததிகளுக்கும் பயன்படும் வண்ணம் ஆகமங்களாக தொகுத்தார்கள். அப்படித் தொகுத்த திருநாளே “சுருத பஞ்சமி” என்று குறிக்கப்படுகிறது.
சரஸ்வதி அல்லது ஆகமஸ்வரூபி
”திவ்யதொனி” என்பது பெண்பால் ஈற்றுச் சொல்லாகிய இகரத்தில் முடிவதால் ஜினாகமங்களைப் பெண்ணாக உருவகம் செய்து அவற்றுக்கு ”ஜினவாணி” என்றும் ஒலியாக வெளிப்பட்டதால் “வாக்தேவி” எனவும் குறிப்பிட்டார்கள்.மேலும், ஆகமங்ள் கூறும் அறங்கள் மனித வாழ்வுக்கு இன்றியமையாததாக கருதப்படும் நீருடன் ஒப்புமைப்படுத்தப்பட்டன. எப்படி நீர் மேட்டிலிருந்து கீழ் நோக்கி பயணிக்குமோ, உயர்ந்த உன்னத இடத்தையடைந்த தீர்த்தங்கரர்கள் வாயிலாக எளியநிலையில் உள்ள மனதர்களுக்கு அவைகள் பாய்ந்து வருவதால் அவற்றை நீருடன் ஒப்புமை பெறதக்கவகையில் “சரஸ்வதி” என்றும் அழைக்கப்பட்டது. இவ்வாகமங்கள் மனித வாழ்க்கைக்கு “ஐஸ்வர்யமாக” கருத்தட்டதால் இவை “ஜினஐஸ்வரயம்” என்றும் அழைக்கப்பட்டது.
பெண்ணாக உருவகித்தல்
நிகழ்க்கால தீர்த்தங்கரர்களில் முதல்வராகக் கருதப்படுபவர் “ஆதிநாதர்” என்று அழைக்கப்படும் “ஆதிபகவ”னாவார். இவரே முதன் முதல் எண்களையும், எழுத்துக்களையும் முறையே தம் மகள்களான பிராம்மி, சுந்தரி என்பவர்களுக்கு கற்றுக்கொடுத்தார். (இன்றும் கல்வெட்டில் எழுதப்படுகிற எழுத்துக்கு “பிராம்மி” என அழைக்கப்படுவது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது) இதையே “எண்ணோடு எழுத்திரண்டும் இயம்பிய ஆதிமூர்த்தி” என்று சூடாமணி நிகண்டு குறிக்கும். இதனால் சமணம் கல்வியை பெண்ணாக உருவகப்படுத்துவதற்கு இதுவும் ஒரு காரணம் எனலாம்.
வளரும்....
இரா.பானுகுமார்,
சென்னை 44
உபாத்தியாயர் மற்றும் ஜினசுருதி
கல்விக்கு ஏற்றம் கொடுத்து இவ்வுலகில் மனிதம் நிலைப் பெற முயன்ற சமயங்களில் சமணம் முதன்மையானது என்றால் அது மிகையாகாது! சமணத்தில் கற்றல், கற்பித்தல் ஆகிய செயல்கள் புண்ணியச் செயல்களாக (நற்கட்டு) கருதப்படுகிறது. சமணகர்கள் தினம் வணங்கவேண்டிய
அரகந்தர், சித்தர், ஆச்சாரியர், உபாத்தியாயர், சர்வ சாதுக்கள், ஜின தர்மம், ஜின சுருதம், ஜின சைத்தியம், ஜின சைத்தியாலயம் என்னும் ஒன்பது தேவதைகளுள் உபாத்தியாயர் - கற்பிப்பவர் (வாத்தியார் என்று பின்னாளில் மருவியது) மற்றும் “ஜினசுருதம்” (ஆகமங்களைக் கற்றல்) என்னும் ஜினாகமங்களும் குறிக்கப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது. ஜினசுருதம், ஜினசுருதி என்ற பெயர்கள் ஜைன ஆகமங்களைக் குறிக்கும்.
ஜினசுருதம்
தீர்த்தங்கரர்கள் வாலறிவு (கேவல ஞானம்) என்னும் முழுதுணர் ஞானத்தை அடைந்தவுடன், தான் பெற்ற வரம்பற்ற அறிவையையும், உயிர்கள்
உய்ய அடைய வேண்டிய அறத்தையும் உரைக்க தேவேந்திரனால் ஏற்படுத்தப்படும் “சமவசரணம்” என்னும் அறஉபதேச மண்டபத்தில் தியான ரூபியாக எழுந்தருளுவார்கள். அப்போது அவரிகளிடமிருந்து திவ்யமயமான ஒலி பிறக்கும். இதுவே “திவ்யதொனி” எனப்படும். தீர்த்தங்கரர்கள் உதடுகள் அசையாமலே இந்த த்வனி பிறக்கின்றன. அவ்வாறு வெளிவரும் ஓசையானது கம்பிரமாகவும்,மனத்திற்கு இனிமையாகவும்,குற்றமற்றதாகவும்,பூவுலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் கேட்கும்படியாகவும் இருக்கும். இது தீர்த்தங்கரர்களுக்கு ஏற்படும் எண்வகை அதிசயங்களில் ஒன்று! கணதரர்கள் இவற்றின் பயன்களை பின்னர் வரும் சந்ததிகளுக்கும் பயன்படும் வண்ணம் ஆகமங்களாக தொகுத்தார்கள். அப்படித் தொகுத்த திருநாளே “சுருத பஞ்சமி” என்று குறிக்கப்படுகிறது.
சரஸ்வதி அல்லது ஆகமஸ்வரூபி
”திவ்யதொனி” என்பது பெண்பால் ஈற்றுச் சொல்லாகிய இகரத்தில் முடிவதால் ஜினாகமங்களைப் பெண்ணாக உருவகம் செய்து அவற்றுக்கு ”ஜினவாணி” என்றும் ஒலியாக வெளிப்பட்டதால் “வாக்தேவி” எனவும் குறிப்பிட்டார்கள்.மேலும், ஆகமங்ள் கூறும் அறங்கள் மனித வாழ்வுக்கு இன்றியமையாததாக கருதப்படும் நீருடன் ஒப்புமைப்படுத்தப்பட்டன. எப்படி நீர் மேட்டிலிருந்து கீழ் நோக்கி பயணிக்குமோ, உயர்ந்த உன்னத இடத்தையடைந்த தீர்த்தங்கரர்கள் வாயிலாக எளியநிலையில் உள்ள மனதர்களுக்கு அவைகள் பாய்ந்து வருவதால் அவற்றை நீருடன் ஒப்புமை பெறதக்கவகையில் “சரஸ்வதி” என்றும் அழைக்கப்பட்டது. இவ்வாகமங்கள் மனித வாழ்க்கைக்கு “ஐஸ்வர்யமாக” கருத்தட்டதால் இவை “ஜினஐஸ்வரயம்” என்றும் அழைக்கப்பட்டது.
பெண்ணாக உருவகித்தல்
நிகழ்க்கால தீர்த்தங்கரர்களில் முதல்வராகக் கருதப்படுபவர் “ஆதிநாதர்” என்று அழைக்கப்படும் “ஆதிபகவ”னாவார். இவரே முதன் முதல் எண்களையும், எழுத்துக்களையும் முறையே தம் மகள்களான பிராம்மி, சுந்தரி என்பவர்களுக்கு கற்றுக்கொடுத்தார். (இன்றும் கல்வெட்டில் எழுதப்படுகிற எழுத்துக்கு “பிராம்மி” என அழைக்கப்படுவது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது) இதையே “எண்ணோடு எழுத்திரண்டும் இயம்பிய ஆதிமூர்த்தி” என்று சூடாமணி நிகண்டு குறிக்கும். இதனால் சமணம் கல்வியை பெண்ணாக உருவகப்படுத்துவதற்கு இதுவும் ஒரு காரணம் எனலாம்.
வளரும்....
இரா.பானுகுமார்,
சென்னை 44
Labels:
Jainism,
Jinavani,
Saraswathi devi,
Tamil Jains,
சமணம்,
சரஸ்வதி,
தமிழ்ச்சமணம்,
வாக்குதேவி,
ஜினவாணி
Friday, September 11, 2009
தாமரைக் கண்ணான் உலகு!
தாமரைக் கண்ணான் உலகு
தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு – திருக்குறள் (1103)
(புணர்ச்சி மகிழ்தல் என்ற அதிகாரத்தில் உள்ளது)
அகத்திய குழுமத்தில் எழுதும் போது இக்குறள்ப் பற்றி விவாதிக்கப்பட்டது. குறளின் சமயத்தை இக்குறளில் ஏன் தேடுகிறார்கள் என்று நினைத்துச் சிரித்ததுண்டு :-)
நேற்று முன்தினம் நண்பர் ஒருவர் கைபேசியில் அழைத்து ”தாமரைக் கண்ணான் உலகு” பற்றிச் சொல்ல சொன்னார். ஏதோ ஒரு யாஹீ குழுமத்தில் மடலாடல் நடந்துக் கொண்டிருப்பதாகவும் சொன்னார். அவர் அப்படித்தான்! திடீரென்று கைப்பேசியில் அழைப்பார். ஏதாவது கேட்பார்? எங்காவது எழுதுகிறீர்களா? என்றால் சிரித்துவிட்டு கட் செய்து விடுவார்.
உரையாசிரியர்களின் பார்வை:
மணக்குடவர் உரை:
தம்மால் விரும்பப்படுவாரது மெல்லிய தோளின்கண் துயிலுந் துயிலினும் இனிதோ? இந்திரனது சுவர்க்கம்.
இது சுவர்க்கத்தின்பமும் இதுதானே யென்று கூறியது.
பரிமேலழகர் உரை:
தாம் வீழ்வார் மென் தோள்துயிலின் இனிதுகொல் – ஐம்புலன்களையும் நுகர்வார்க்குத் தாம் விரும்பும் மகளிர் மெல்லிய தோளின்கண் துயிலும் துயில்போல வருந்தாமல் எய்தலாமோ; தாமரைக் கண்ணான் உலகு – அவற்றைத் துறந்த தவயோகிகள் எய்தும் செங்கண்மால் உலகம்.
ஐம்புலன்களையும் நுகர்வார் என்னும் பெயர் அவாய் நிலையான் வந்தது. இப்பெற்றித்தாய் துயிலைவிட்டுத் தவயோகங்களான் வருந்த வேண்டுதலின், எம்மனோர்க்கு ஆகாது என்னும் கருத்தால் “இனிது கொல்” என்றான். இந்திரன் உலகு என்று உரைப்பாரும் உளர். தாமரைக்கண்ணான் என்பது அவனுக்குப் பெயரன்மையின், அஃது உரையன்மையறிக.
(அப்பா! எப்படியெல்லாம் மழுப்புகிறார் ;-)
சமணம் சார்ந்த உரை
யான் முன்னமே சொல்லியது போல (என் மற்ற கட்டுரையைப் படிக்கவும்) மணக்குடவர் உரை சுருக்கமும், நேரிதின் பொருளும் கொண்டதாகயிருக்கிறது.
இந்திரன் உலகு
சமணக் கொள்கைப்படி, நல்வினைக்கட்டால் தேவக்கதியை அடைந்த உயிர்கள் தேவலோகத்தில் தேவர்களாக பிறந்து பலத்தரப்பட்ட சுகங்களையும் அனுபவிக்கும். அச்சுகங்களை எழுத்தில் சொல்ல முடியாது. :-) இது நிற்க!
புணர்ச்சியில் மகிழும் தலைவன், இவள் உடலைத் தழுவதால் கிட்டும் சுகத்தை விட சுவர்க்கத்தில் கிடைக்கும் சுகம் இனிதாக இருக்க முடியுமோ? முடியாது! என்று நினைக்கிறான்.
இப்போது சொல்லுங்கள் சுவர்க்கம் என்றால் அது இந்திரலோகமா? அல்லது திருமால் உறையும் வைகுண்டமா? நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்.
வைகுண்டத்தில் ”சுவர்க்கத்துக்கு” இடம் உண்டென்றால், அது தாமரைக் கண்ணான் உலகு தான்!! ;-)
உரையின்மையா?
பரிமேலழகர் “தாமரைக் கண்ணான்” என்ற பெயர் இந்திரனுக்கு இல்லை என்ற வாதம் இங்கு நிற்காது? எங்கனமெனின், “எண்குணத்தான்”, ”அறவாழி அந்தணன்” போன்ற பெயர்கள் அருகனைக் குறிப்பதாக எல்லா நிகண்டுகளும் கூறுகின்றன? பரிமேலழகர் கூற்றை ஏற்றுக் கொண்டால், இக்கூற்றையும் தான் ஏற்றாக வேண்டும் இல்லையா?! “எண்குணத்தான்” என்ற பெயர் சிவபிரானுக்கு இன்மையினால் தானே சிவபிழம்பு என்று போற்றப்பட்ட ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சூடாமணி நிகண்டை மாற்றி எழுத முயன்றார். சிவன் பெயர் தொகுதியில் “எண்குணத்தான்” என்ற பெயரை சேர்க்க முயன்றார்! இந்த ஒரு சான்றே போதும்!
திருக்குறளின் கடவுள் வாழ்த்தில் உள்ள குறட்ப்பாக்கள் அருகனைக் குறிக்கிறது என்பது சொல்லாமலே விளங்கும்!
அன்பர்கள் சிந்திக்கவும்!
திரு.எஸ்.இராமச்சந்திரன் அவர்கள் தன் கட்டுரையில் “தாமரைக் கண்ணான்” இந்திரனைக் குறிக்கின்ற சில குறிப்புகளை கொடுத்திருக்கிறார். பார்க்கவும்!
http://www.sishri.org/indran.html
இரா.பானுகுமார்,
சென்னை 44
தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு – திருக்குறள் (1103)
(புணர்ச்சி மகிழ்தல் என்ற அதிகாரத்தில் உள்ளது)
அகத்திய குழுமத்தில் எழுதும் போது இக்குறள்ப் பற்றி விவாதிக்கப்பட்டது. குறளின் சமயத்தை இக்குறளில் ஏன் தேடுகிறார்கள் என்று நினைத்துச் சிரித்ததுண்டு :-)
நேற்று முன்தினம் நண்பர் ஒருவர் கைபேசியில் அழைத்து ”தாமரைக் கண்ணான் உலகு” பற்றிச் சொல்ல சொன்னார். ஏதோ ஒரு யாஹீ குழுமத்தில் மடலாடல் நடந்துக் கொண்டிருப்பதாகவும் சொன்னார். அவர் அப்படித்தான்! திடீரென்று கைப்பேசியில் அழைப்பார். ஏதாவது கேட்பார்? எங்காவது எழுதுகிறீர்களா? என்றால் சிரித்துவிட்டு கட் செய்து விடுவார்.
உரையாசிரியர்களின் பார்வை:
மணக்குடவர் உரை:
தம்மால் விரும்பப்படுவாரது மெல்லிய தோளின்கண் துயிலுந் துயிலினும் இனிதோ? இந்திரனது சுவர்க்கம்.
இது சுவர்க்கத்தின்பமும் இதுதானே யென்று கூறியது.
பரிமேலழகர் உரை:
தாம் வீழ்வார் மென் தோள்துயிலின் இனிதுகொல் – ஐம்புலன்களையும் நுகர்வார்க்குத் தாம் விரும்பும் மகளிர் மெல்லிய தோளின்கண் துயிலும் துயில்போல வருந்தாமல் எய்தலாமோ; தாமரைக் கண்ணான் உலகு – அவற்றைத் துறந்த தவயோகிகள் எய்தும் செங்கண்மால் உலகம்.
ஐம்புலன்களையும் நுகர்வார் என்னும் பெயர் அவாய் நிலையான் வந்தது. இப்பெற்றித்தாய் துயிலைவிட்டுத் தவயோகங்களான் வருந்த வேண்டுதலின், எம்மனோர்க்கு ஆகாது என்னும் கருத்தால் “இனிது கொல்” என்றான். இந்திரன் உலகு என்று உரைப்பாரும் உளர். தாமரைக்கண்ணான் என்பது அவனுக்குப் பெயரன்மையின், அஃது உரையன்மையறிக.
(அப்பா! எப்படியெல்லாம் மழுப்புகிறார் ;-)
சமணம் சார்ந்த உரை
யான் முன்னமே சொல்லியது போல (என் மற்ற கட்டுரையைப் படிக்கவும்) மணக்குடவர் உரை சுருக்கமும், நேரிதின் பொருளும் கொண்டதாகயிருக்கிறது.
இந்திரன் உலகு
சமணக் கொள்கைப்படி, நல்வினைக்கட்டால் தேவக்கதியை அடைந்த உயிர்கள் தேவலோகத்தில் தேவர்களாக பிறந்து பலத்தரப்பட்ட சுகங்களையும் அனுபவிக்கும். அச்சுகங்களை எழுத்தில் சொல்ல முடியாது. :-) இது நிற்க!
புணர்ச்சியில் மகிழும் தலைவன், இவள் உடலைத் தழுவதால் கிட்டும் சுகத்தை விட சுவர்க்கத்தில் கிடைக்கும் சுகம் இனிதாக இருக்க முடியுமோ? முடியாது! என்று நினைக்கிறான்.
இப்போது சொல்லுங்கள் சுவர்க்கம் என்றால் அது இந்திரலோகமா? அல்லது திருமால் உறையும் வைகுண்டமா? நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்.
வைகுண்டத்தில் ”சுவர்க்கத்துக்கு” இடம் உண்டென்றால், அது தாமரைக் கண்ணான் உலகு தான்!! ;-)
உரையின்மையா?
பரிமேலழகர் “தாமரைக் கண்ணான்” என்ற பெயர் இந்திரனுக்கு இல்லை என்ற வாதம் இங்கு நிற்காது? எங்கனமெனின், “எண்குணத்தான்”, ”அறவாழி அந்தணன்” போன்ற பெயர்கள் அருகனைக் குறிப்பதாக எல்லா நிகண்டுகளும் கூறுகின்றன? பரிமேலழகர் கூற்றை ஏற்றுக் கொண்டால், இக்கூற்றையும் தான் ஏற்றாக வேண்டும் இல்லையா?! “எண்குணத்தான்” என்ற பெயர் சிவபிரானுக்கு இன்மையினால் தானே சிவபிழம்பு என்று போற்றப்பட்ட ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சூடாமணி நிகண்டை மாற்றி எழுத முயன்றார். சிவன் பெயர் தொகுதியில் “எண்குணத்தான்” என்ற பெயரை சேர்க்க முயன்றார்! இந்த ஒரு சான்றே போதும்!
திருக்குறளின் கடவுள் வாழ்த்தில் உள்ள குறட்ப்பாக்கள் அருகனைக் குறிக்கிறது என்பது சொல்லாமலே விளங்கும்!
அன்பர்கள் சிந்திக்கவும்!
திரு.எஸ்.இராமச்சந்திரன் அவர்கள் தன் கட்டுரையில் “தாமரைக் கண்ணான்” இந்திரனைக் குறிக்கின்ற சில குறிப்புகளை கொடுத்திருக்கிறார். பார்க்கவும்!
http://www.sishri.org/indran.html
இரா.பானுகுமார்,
சென்னை 44
Labels:
Jainism,
samanam,
Tamil Jains,
Thirukural
Subscribe to:
Posts (Atom)